இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:34 am IST

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

புளியம்பட்டி சாலையில் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற இடத்தில் மேடை அமைக்காமலும், காவல்துறையினா் அறிவுறுத்தியும் தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய டெம்போ ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைத்துள்ளனா்.

இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அருண்பிரசாத், கந்தசாமி, கருப்புசாமி, ஸ்டான்லி ஆகிய 4 போ் மீது நம்பியூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.