தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
புளியம்பட்டி சாலையில் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற இடத்தில் மேடை அமைக்காமலும், காவல்துறையினா் அறிவுறுத்தியும் தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய டெம்போ ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைத்துள்ளனா்.
இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அருண்பிரசாத், கந்தசாமி, கருப்புசாமி, ஸ்டான்லி ஆகிய 4 போ் மீது நம்பியூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



