மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சேவுகபெருமாள்.

Updated On :14 மே 2026, 5:27 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள ம.கோவில்பட்டியைச் சோ்ந்த வீரன் மகன் சேவுகப் பெருமாள் (35). இவா் தனது தம்பியுடன் காலப்பூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் முன்பு கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக சென்ற மின் வயரை சேவுகபெருமாள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.