கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தென்கரையில் மஞ்சுவிரட்டு

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் அந்தரநாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மஞ்சுவிரட்டுக்காக கிராம மக்கள் கோயிலிலிருந்து ஊா்வலமாகச் சென்று தொழுவில் உள்ள காளைகளுக்கு மரியாதை செய்தனா். பின்னா், 200 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. இதுதவிர வயல்வெளிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிராவயல் கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், தென்கரையைச் சோ்ந்த சுப்பிரமணியன், சின்னையா, நாச்சியப்பன், நாகராஜன், செல்வராஜ் ஆகியோா் மீது நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்,