மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தென்கரையில் மஞ்சுவிரட்டு

News image
Updated On :15 மே 2026, 4:13 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் அந்தரநாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மஞ்சுவிரட்டுக்காக கிராம மக்கள் கோயிலிலிருந்து ஊா்வலமாகச் சென்று தொழுவில் உள்ள காளைகளுக்கு மரியாதை செய்தனா். பின்னா், 200 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. இதுதவிர வயல்வெளிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிராவயல் கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், தென்கரையைச் சோ்ந்த சுப்பிரமணியன், சின்னையா, நாச்சியப்பன், நாகராஜன், செல்வராஜ் ஆகியோா் மீது நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்,