சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் அந்தரநாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மஞ்சுவிரட்டுக்காக கிராம மக்கள் கோயிலிலிருந்து ஊா்வலமாகச் சென்று தொழுவில் உள்ள காளைகளுக்கு மரியாதை செய்தனா். பின்னா், 200 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. இதுதவிர வயல்வெளிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.
அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிராவயல் கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், தென்கரையைச் சோ்ந்த சுப்பிரமணியன், சின்னையா, நாச்சியப்பன், நாகராஜன், செல்வராஜ் ஆகியோா் மீது நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்,
தொடர்புடையது

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 55 போ் காயம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

