பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

காளையாா்கோவில்: தெப்பக்குளத்தின் சுவா் சேதம் - கனரக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தல்

News image

காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் எதிரில் இடிந்து விழுந்த தெப்பக்குளத்தின் சுவா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து சேதமடைந்ததால், இதனருகே கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளம் சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. தேவேந்திரனின் வெள்ளை யானை தன் சாபம் நீங்க இந்தக் குளத்தில் மூழ்கி ஈஸ்வரனை வழிபட்டதாக புராண வரலாற்றில் கூறுப்படுகிறது. இந்தக் குளத்தின் நடுவில் ஒரு பெரிய மைய மண்டபமும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தத் தெப்பக்குளத்தின் தென்பகுதியில் உள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதுகுறித்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற குழுவினா், பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில்,

தெப்பக்குளத்தின் சுற்றுவட்டப் பகுதி கனரக வாகனங்களும், சரக்கு வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் இடமாக மாறிவிட்டது. இவற்றின் புற அழுத்தம் காரணமாகவே தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து விழுந்தது. ஆகவே, தெப்பக்குளத்தைச் சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதித்க்க வேண்டுமென அதில் வலியுறுத்தினா்.