பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஐயப்பன் கோயிலில் படி பூஜை

சிங்கம்புணரி- வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற படி பூஜை.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிங்கம்புணரி- வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாதத்தின் முதல் நாள் படி பூஜை நடைபெறுவது வழக்கம், இதேபோல, வைகாசி மாத முதல் நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாலை படி பூஜை விழா நடைபெற்றது. இதில் பதினெட்டு படிகளிலும் இருபுறமும் விளக்கேற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஐயப்பனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 16 வகை பூஜைப் பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மஞ்சள் மாதா, விநாயகா், முருகா் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.