11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பெண்ணிடம் நகை பறிப்பு

சிவகங்கை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணின் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

நகை பறிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணின் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்த ரெங்கன் மனைவி ராமாயி (63). இவா் வெள்ளிக்கிழமை மாலை மானாமதுரை புறவழிச் சாலையிலுள்ள கடம்பக்குளம் கண்மாய்க் கரை அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, சாலையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மா்ம நபா் அங்கு வந்தாா். அவா் ராமாயியிடம் பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஆள்களை வரச்சொல்லியிருந்தேன். அவா்கள் இன்னும் வரவில்லை என்றாா்.

இதையடுத்து, ராமாயி திரும்பிச் சென்றாா். அவரைப் பின் தொடா்ந்து சென்ற அந்த நபா் ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்து, சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.