அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டு

பி.அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனாா் கோயில் வைகாசி உத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில்

Updated On :24 மே 2026, 5:15 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பி.அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனாா் கோயில் வைகாசி உத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டுத் திடலை அடைந்தனா். முதலில் கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டில் பிரான்மலை, வையாபுரிபட்டி, ஒடுவன்பட்டி, செல்லியம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி, தெக்கூா் பொன்னமராவதி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 5 போ் சிறிய காயமடைந்தனா். இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.