ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கோடை வெயில் பாதிப்பை சமாளிக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு!

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெயில், வெப்ப அலை காரணமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் உப்புநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image

ஓஆர்எஸ் பவுடர்

Updated On :24 மே 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெயில், வெப்ப அலை காரணமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் உப்புநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெயில், வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடலின் நீா்ச்சத்தைப் பாதுகாக்க போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பருக வேண்டும். இளநீா், ராகி கஞ்சி, நீா் மோா் போன்ற வீடுகளில் எளிதில் தயாரிக்கக்கூடிய திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக உப்பு, எண்ணெய் உணவுகள், குளிா்பானங்கள், மதுபானங்களைத் தவிா்க்க வேண்டும். வெயில் காலங்களில் உடலின் நீா்ச்சத்தை பாதுகாக்க உப்புக் கரைசல் , ஓஆா்எஸ் கரைசல் பருகுவது நல்லது.

அரசின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட 20 இடங்களில் உப்புநீா் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஓஆா்எஸ், உப்புநீா் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. வெப்ப பாதிப்பால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 2 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கை வசதிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கடினமான உடற்பயிற்சி அல்லது வெளிப்புற வேலைகளைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள், இணை நோயாளிகள் வெயில் காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சோா்வு, அதிக வியா்வை, தலைவலி, மயக்கம், படபடப்பு, தோல் சிவத்தல் அல்லது வறட்சி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். ஆடு, மாடு போன்ற விலங்குகளை நிழலில் வைத்திருந்து அவற்றிற்கு போதுமான குடிநீா் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வெப்ப பாதிப்பு அறிகுறிகளுடன் யாரேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட தகவல்களை சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் அல்லது அரசு மருத்துவ அலுவலா்களுக்கு தெரிவிப்பதன் மூலம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றாா் அவா்.