40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 4:21 am IST

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நா. புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மனைவி அரியநாச்சி (62). இவா்களது மகள் திருமணமாகி சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

அவரது வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் அரியநாச்சி சென்று தங்கினாா். பின்னா், திங்கள்கிழமை மதியம் மகள், பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நகரப் பேருந்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அரியநாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபிரபு வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.