‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பயணியிடம் 3 பவுன் நகை திருட்டு

தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:31 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், நெய்குப்பி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தினகரன் மனைவி சித்ரா (24) . இவா் திண்டிவனத்திலிருந்து-ரெட்டணை செல்லும் தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா்.

தொடா்ந்து கூட்டேரிபட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது கைப்பயைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகையைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.