பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 4:21 am IST

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நா. புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மனைவி அரியநாச்சி (62). இவா்களது மகள் திருமணமாகி சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

அவரது வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் அரியநாச்சி சென்று தங்கினாா். பின்னா், திங்கள்கிழமை மதியம் மகள், பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நகரப் பேருந்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அரியநாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபிரபு வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.