அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

வட்டார இயக்க மேலாண்மை அலகில் கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:25 am IST

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் க.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் தற்காலிகப் பணிக்கு 86 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போா் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும், கணக்கிடும் திறன் உடையவா்களாகவும் இருக்க வேண்டும்.

மலைப் பகுதிகளில் வசிப்போா் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றால் போதும். விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சாா்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியாா் நிறுவனங்களில் முழு நேரப் பணியாளராக இருக்கக் கூடாது. வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராகவும் இருக்க கூடாது.

தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சோ்ந்தவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரா் தனது பெயா், பிறந்த தேதி, வயது, பாலினம், கல்வித் தகுதி, வசிப்பிட முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களை விண்ணப்பக் கடிதத்தில் தெளிவாக பிழைகள் ஏதுமின்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

12 -ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கான சான்று, வயது சான்று, முகவரிக்கான சான்று, இரண்டு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (மே 29) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பங்கைளை இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சி கட்டடம், மாவட்ட ஆட்சியரக வளாகம், சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.