சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா தேவியாா் உடனான சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக, சேவுகப்பெருமாள் பூரணை புஷ்கலை தேவியா் ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள், ஊஞ்சலாடும் நிகழ்வு, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் மங்கலநாண் பூட்டப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
இதையடுத்து, பெண் பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சிங்கம்புணரி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இரவில் 5 தலை நாகம் வாகனத்தில் உற்சவா் நான்கு ரத வீதிகளில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சமணா்களை கழுவேற்றும் களுவன் திருவிழாவும், வருகிற 31-ஆம் தேதி புரவி எடுப்பு விழாவும், ஜுன் 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி பூப்பல்லக்கும் நடைபெறும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.



தொடர்புடையது

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

திருப்பாச்சூா் வாசீஸ்வரா் சுவாமி கோயில் திருக்கல்யாணம்

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 24-இல் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



