ஆண்டிபட்டி அருகே உள்ள அம்பாசமுத்திரத்தில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கண்டமனூர் எஸ்.ஐ. அப்துல்ரஹீம் தலைமை வகித்தார். விழாவில் தேனி கம்மவர் சங்க பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, சாலைப் பாதுகாப்பு வாரவிழாவின் நோக்கத்தை பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகள் மூலம் எட்டு இடங்களில் பிரசாரம் செய்தனர்.
வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு வர்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
விழாவில் எஸ்.எஸ்.ஐ. ஜான், ஏட்டு தாமரைக்கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.