போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிலமலை கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (37), சின்னச்சாமி மனைவி மகேஸ்வரி (46) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


