/

கடமலைக்குண்டு அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

கடமலைக்குண்டு அருகே கணவர் கோயில் திருவிழாவுக்கு வராததால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:20 am

கடமலைக்குண்டு அருகே கணவர் கோயில் திருவிழாவுக்கு வராததால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு அருகே பேச்சியம்மன் கோயில்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சுமித்ரா (20). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. பாஸ்கரன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுமித்ரா பேச்சியம்மன் கோயில்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு வந்துள்ளார். அப்போது தனது கணவர் பாஸ்கரனையும் திருவிழாவுக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வேலை இருப்பதால் வர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த சுமித்ரா, சனிக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.