இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேனியில் பெண்கள் இயக்கம் அமைதி ஊர்வலம்

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:16 am IST

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
 தேனியில் பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலில் இருந்து மாவட்டத் தலைவர் அருள்மொழி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். மதுரை சாலை, பங்களாமேடு திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.