இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பேருந்து நிலையம் அருகே அரசு மதுக் கடைகள்: இடம் மாற்ற தேனி ஆட்சியர் உத்தரவு

தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 4 அரசு மதுக்கடை மற்றும்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:18 am IST

தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 4 அரசு மதுக்கடை மற்றும் மதுக்கூடங்கள் இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் கூறியது: மாவட்டத்தில் 90 அரசு மதுக் கடை மற்றும் மதுக் கூடம் செயல்பட்டு வந்தன.  தற்போது இதில் 30 மதுக் கடைகளில் மட்டுமே மதுக் கூடங்கள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
 ஆனால், உரிமம் பெறாத இடங்களிலும் மதுக் கூடங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அங்கு தரமற்ற உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அனைத்து மதுக் கடை மற்றும் மதுக் கூடங்களிலும் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை நடைபெறுவதை தடுப்பதற்கும், தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய பகுதியில் செயல்பட்டு வரும் 4 அரசு மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை இடம் மாற்றம் செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 4 மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் ஒரு வாரத்திற்குள் இடம் மாற்றப்பட்டு விடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.