ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா
ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவினையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவினையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இக்கோயிலில் கடந்த ஏப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் பின் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப். 27 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. தேர்த் திருவிழாவையொட்டி ஏப். 29 ஆம் தேதி சுவாமி கோயிலில் இருந்து எழுந்தருளி தேரை வந்தடைந்தார். திங்கள்கிழமை (ஏப்.30) மாலை 5 மணிக்கு தேரில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜம்புலிபுத்தூரை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை புஷ்ப பல்லாக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...