
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி மாநிலத்தில் 2ஆவது தூய்மை நகராக தேர்வு பெற்றது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகராட்சி ஆணையாளர் ந.சங்கரன், இதற்கான சான்றிதழை தமிழக முதல்வரிடமிருந்து பெற்றார்.
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு செய்த பல்வேறு சேவைகளுக்காக சிறந்த நகராட்சி தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு, கம்பம் நகராட்சி நிர்வாகம், தமிழகத்திலேயே தூய்மையான நகராட்சிக்கான இரண்டாவது இடமும், சிறந்த நிதி நிர்வாகம், ஆளுமை ஆகியவற்றுக்காகவும் தேர்வு பெற்றது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான விருதை கம்பம் நகராட்சி ஆணையர் ந.சங்கரனிடம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






