மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியப் போட்டி

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டியில் 5 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
Updated on
1 min read

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டியில் 5 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
 போடி அரிமா சங்கம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-வது பகுதி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆர்.நித்யா, எஸ்.பானுப்பிரியா, வி.தஷ்வின் ஆகிய மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் இ.ராஜேஸ்வரி, வி.ஜோயல் ஆகியோர் எதிர்கால உலக அமைதி என்ற தலைப்பிலும், எஸ்.தாரணி, ஏ.சரவணபாண்டியன் ஆகியோர் வனம், காடு, சோலை வளங்கள் என்ற தலைப்பிலும் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் இரா.பிருதிவிராஜ் தலைமை வகித்தார். போடி அரிமா சங்க தலைவர் குணசேகரன், பொருளாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். உதவி தலைமையாசிரியர் செந்தில் நன்றி கூறினார். 
இதேபோல் மற்ற 4 பள்ளிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com