கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுடுகாடு வசதி கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை, ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:17 pm

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை, ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கிராம வழிகாட்டும் குழுக்களின் கூட்டமைப்பு, தேன் சுடர் பெண்கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்டாரம் தி.பொம்மிநாயக்கன்பட்டி, சின்னமலையாபுரம், கோத்தலூத்து, மேக்கிழார்பட்டி ஆதி திராவிடர் சமுதாயத்தினருக்கு சுடுகாடு மற்றும் சுடுகாடு பாதை வசதி செய்து தர வேண்டும், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுடுகாட்டில் நிழல் குடை வசதி செய்து தர வேண்டும், பிச்சம்பட்டி, 
ராமகிருஷ்ணாபுரம் ஆகிய 
கிராமங்களில் எரியூட்டுக் கொட்டகை, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். 
தேன் சுடர் பெண்கள் இயக்கத் தலைவர் வி.கருத்தம்மாள் தலைமை வகித்தார். பின்னர், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஞானசேகரனிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.