47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தெரு விளக்குகளை பராமரிக்க கோரிக்கை

ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:19 am

DIN

ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆண்டிபட்டி பேரூராட்சிக்குள்பட்ட காமராஜர் நகர், ரயில்வே பீடர் சாலை, நாடார் தெரு, பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி, குமராபுரம், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.   இப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.    காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்கு உடைந்து மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  
   எனவே, தெரு விளக்குகளை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.