சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தேனி மாவட்டத்தில் 22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில்,  22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 1:08 am IST

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில்,  22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கை, கால் ஊனமுற்ற 12,713 பேர், செவித்திறன் குறைபாடு உள்ள 2,389 பேர், கண் பார்வையற்ற 1,834 பேர், மன வளர்ச்சி குன்றிய 3,857 பேர், பல்வகை மாற்றுத் திறனாளிகள் 606 பேர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 641 பேர், புற உலக சிந்தனையற்ற 47 பேர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 169 பேர் என மொத்தம் 22,256 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், சலுகைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டு  4,332 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் மொத்தம் ரூ. 6 கோடியே 27 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.