தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கை, கால் ஊனமுற்ற 12,713 பேர், செவித்திறன் குறைபாடு உள்ள 2,389 பேர், கண் பார்வையற்ற 1,834 பேர், மன வளர்ச்சி குன்றிய 3,857 பேர், பல்வகை மாற்றுத் திறனாளிகள் 606 பேர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 641 பேர், புற உலக சிந்தனையற்ற 47 பேர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 169 பேர் என மொத்தம் 22,256 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், சலுகைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டு 4,332 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் மொத்தம் ரூ. 6 கோடியே 27 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


