போடி அருகே வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே கரட்டுப்பட்டி செல்லும் சாலையில் மணி என்பவருக்கு சொந்தான தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்
அப்துல் ரஹீம் தலைமையில் போலீஸார் அங்கு சென்று பார்த்தனர்.
சடலத்தை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது, போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்த பால்பாண்டி (37) என்பதும், இவர் தேங்காய் உறிக்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தூக்கிலிடப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன பால்பாண்டிக்கு 15 வருடம் முன் திருமணமான நிலையில், 5 வருடத்திற்கு முன் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில்தான் பால்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

