போடி அருகே வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே கரட்டுப்பட்டி செல்லும் சாலையில் மணி என்பவருக்கு சொந்தான தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்
அப்துல் ரஹீம் தலைமையில் போலீஸார் அங்கு சென்று பார்த்தனர்.
சடலத்தை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது, போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்த பால்பாண்டி (37) என்பதும், இவர் தேங்காய் உறிக்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தூக்கிலிடப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன பால்பாண்டிக்கு 15 வருடம் முன் திருமணமான நிலையில், 5 வருடத்திற்கு முன் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில்தான் பால்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

