தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோர் தமிழ்ச் செம்மல் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் வளர்ச்சிக்காக தனியாகவோ, ஏதேனும் அமைப்பு மூலமோ அரும்பணியாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தமிழ்ச் செம்மல் விருது பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு, மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.61.15 லட்சம் ரொக்கம் ஒப்படைப்பு

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

