மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோர் தமிழ்ச்

Updated On :21 மே 2018, 7:01 pm

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோர் தமிழ்ச் செம்மல் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் வளர்ச்சிக்காக தனியாகவோ, ஏதேனும் அமைப்பு மூலமோ அரும்பணியாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தமிழ்ச் செம்மல் விருது பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு, மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.