சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் விற்பனை: ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை

Updated On :21 மே 2018, 7:00 pm

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியது: மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து உரமிடுவதற்காக விவசாயத் துறை மூலம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை அரசு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகளை சேகரித்து, மண் ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டிற்குள் மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 646 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண் வள அட்டையில் குறிப்பிட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் நிலத்தில் பயிர்களுக்குத் தேவையான உரமிடுவதால், உரச் செலவு குறைவதோடு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. சமச்சீர் உரமிடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும். எனவே, மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை கடையில் விற்பனை முனை கருவி(பி.ஓ.எஸ்.) மூலம் உரம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளும் மண் வள அட்டை வைத்திருப்பது அவசியமாகிறது.
தமிழகத்தில் மண் வள அட்டை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டும் மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் க.புதுப்பட்டி, உத்தமபாளையம்(வடக்கு), சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்கள் மண் வள அட்டை முன் மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.