பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகளவு மூலிகை செடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதி கிராம பெண்கள் தினமும் இவற்றை சேகரித்து, வருவாய் ஈட்டி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை,சோத்துப்பாறை மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் கருப்பு காணம், குண்டு மணி, பப்படை என பல்வேறு அரிய மூலிகை வகைகள் விளைந்துள்ளன. இதனை இப்பகுதி பெண்கள் சேகரித்து அதனை விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் தற்போது சிறிய நங்கை என்னும் மூலிகை அதிகளவு வளர்ந்துள்ளது. இந்த மூலிகை செடிகளை கிராமப்புற பெண்கள் சேகரித்து அதனை காயவைத்து தேனி மற்றும் ஆண்டிபட்டியில் உள்ள மூலிகை விற்பனை கடைகளில் விற்று வருகின்றனர்.
இது குறித்து பெரியகுளத்தை சேர்ந்த பாப்பாத்தி கூறியது:
பெரியகுளம் பகுதியில் தற்போது மழை பெய்துள்ளதால் சிறிய நங்கை அதிகளவு வளர்ந்துள்ளது. இதனை சேகரித்து காயவைத்து விற்பனை செய்து வருகிறோம். ஒருகிலோ சிறிய நங்கை இலை ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 200 வரை வருமானம் கிடைக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
