இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆண்டிபட்டியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி நகரில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள்

Updated On :8 அக்டோபர் 2018, 7:48 am IST

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி நகரில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
   ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதிகளில் நிலையில் கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் கொசுக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். 
    ஏற்கெனவே மழையால் காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் மர்ம காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.     இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு கொசு மருந்து புகை அடித்தும், பொதுமக்களிடையே கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருப்பினும் கொசு உற்பத்தியை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் ஆண்டிபட்டி நகரில் கொசுக்களால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 
  எனவே ஆண்டிபட்டி நகரில் கொசுக்களை ஒழிக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.