
போடியில் புதன் கிழமை, இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு (70). இவரது மனைவி பார்வதி (62). இவர்கள் இருவரும் போடி சன்னாசிபுரம் பகுதியில் முருகதாஸ் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தோட்டத்தில் இருந்து நடந்து போடி- தேனி நெடுஞ்சாலைக்கு வந்தனர். அப்போது சாலையோரம் நடந்து வந்தபோது தேனியிலிருந்து போடி நோக்கி வந்த இருசக்கர வாகனம் பார்வதி மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி உயிரிழந்தார்.
இதுகுறித்து அய்யாவு அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கோவை, கிணத்துகடவு சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த சர்புதீன் மகன் இர்பான் ((22) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





