தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
கொடுவிலார்பட்டி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராசு மகன் பெரியசாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தேனி மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி தனது கணவர் மீது புகார் அளித்தார். அதில், திருமணத்தின்போது தனக்கு வரதட்சணையாக அணிவித்திருந்த 90 சவரன் நகைகளை பெரியசாமி வாங்கி வைத்துக் கொண்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவாகவும், மேலும் 50 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் தன்னுடன் வாழ முடியும் என்று கூறி தன்னையும், தனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து, பெரியசாமியை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
