இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெரியகுளம் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் மழையால்

Updated On :13 பிப்ரவரி 2019, 8:14 am IST

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் மழையால் நெல் மூட்டைகள் பாதிப்படைந்துள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
        மேல்மங்கலம் பகுதியில் உள்ள வராக நதிக்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் விளையும் நெல் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனையடுத்து, மேல்மங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆரம்பித்தது.
        இதன்மூலம், இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் விளையும் நெல்மணிகளை மையத்தில் விற்று வந்தனர். இந்நிலையில், தற்போது மேல்மங்கலம் மற்றும் ஜெயமங்கலம் பகுதியில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் நிலையங்களில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
       மேலும், போதிய பணியாள்கள் இல்லாததால், கொள்முதல் செய்வதில் 2 முதல் 7 நாள்கள் வரை தாமதமாகி வருகிறது. சில நாள்களுக்கு முன், கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அப்பகுதியினர் நெல்களை மையத்தின் முன் அடுக்கி வைத்திருந்தனர்.
கடந்த 2 நாள்களாக பெய்த சாரல் மழையால், நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால், போதிய விலை கிடைக்காது எனக் கூறி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, நிலையத்துக்கு கொண்டு வரப்படும் நெல்களை உடனடியாக கொள்முதல் செய்து, பாதுகாப்பான இடங்களில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.