இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கௌரவ ஊக்கத்தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் 33,379 விவசாயிகள் சேர்ப்பு

தேனி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:36 am IST

தேனி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இதுவரை மொத்தம் 33,379 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை சிறு மற்றும் குறு விவசாயிகள் 100 பேருக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கி அவர் பேசியது: 
மத்திய அரசு அறிவித்துள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் கௌர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத் திட்ட நிதியை பயனாளிகளுக்கு
 3 தவணைகளாக வழங்கவும், 2018, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 2019, மார்ச் 31-ஆம் தேதி வரையுள்ள காலத்திற்கு முதல் தவணையாக ரூ.2,000-ஐ இம் மாத இறுதிக்குள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கௌரவ ஊக்கத் தொகை பெறும் சிறு, குறு விவசாயிகள் பட்டியலில் இதுவரை தேனி வட்டாரத்தில் 3,099 பேர், ஆண்டிபட்டி வட்டாரத்தில் 11,336 பேர், பெரியகுளம் வட்டாரத்தில் 6,101 பேர், போடி வட்டாரத்தில் 4,430 பேர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 8,413 பேர் உள்பட மொத்தம் 33,379 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 500 விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கௌர ஊக்கத் தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்: கௌர ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு ஆகிய இடங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தகுதியுள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம்  சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரி பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.