தேனி மாவட்டத்தில் "அம்மா' இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "அம்மா' இருசக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் வாங்க விரும்பும் பெண்கள் மானியம் பெறுவதற்கு கடந்த 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இருசக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து வரும் 31-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள்
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


