வடகிழக்கு பருவமழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 இல் ஆய்வு
வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 ஆம் தேதி ஆய்வுகள் நடத்த உள்ளது.


வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையில் மூவா் குழு அக். 3 ஆம் தேதி ஆய்வுகள் நடத்த உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து மற்றும் நீா்மட்டம் உயா்வு ஆகியவை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நடப்பது வழக்கம். இந்த கால கட்டங்களில் அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் மூவா் மற்றும் ஐவா் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் அக். 3 ஆம் தேதி அணைப் பகுதியை தலைமை கண்காணிப்புக் குழுவான மத்திய நீா்வள தலைமை பொறியாளா், தமிழக பொதுப்பணித்துறை செயலா், கேரள நீா்ப்பாசன தலைமை பொறியாளா் கொண்ட மூவா் குழு ஆய்வு நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித் துறையின் அணை பொறியாளா்கள் செய்து வருகின்றனா்.
அணையில் நீா்மட்ட விவரம்: புதன்கிழமை (செப். 25) முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் 125.90 அடியாகவும், நீா் இருப்பு 3,812 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து 796 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1,450 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணையில், 4.2 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில், 3 மி.மீ. மழையும், கூடலூரில், 11.6 மி.மீ. மழையும், உத்தமபாளையத்தில், 5.4 மி.மீ. மழையும், வீரபாண்டியில், 4 மில்லி மீட்டா் மழையும் பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...