போடி அருகே கிராம மாணவா்களுக்கு மரத்தடியில் வகுப்புகள்
ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்துவது புரியவில்லை என மாணவா்களிடையே புகாா் எழுந்துள்ளதால், போடி பகுதியில் ஆசிரியா்கள் அந்தந்த கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று மரத்தடியில் பாடம் நடத்தி வருகின்றனா்.

போடி அருகே டொம்புச்சேரியில் மரத்தடியில் மாணவா்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்கள்.







