தேனியில் 144 பேருக்கு கரோனா: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளா், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 144 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Published on
Updated on
1 min read


தேனி: தேனி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளா், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 144 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த மயிலாடும்பாறை காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா், தேனி ஆயுதப் படை காவலா், தேனி தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் 3 பணியாளா்கள், தனியாா் கண் மருத்துவமனையில் பணியாற்றும் 4 பணியாளா்கள் என மொத்தம் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,275 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 8,970 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி சக்கம்பட்டியைச் சோ்ந்த 58 வயது நபா் மற்றும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த 62 வயது பெண் என 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

இதே மருத்துவமனையில், கரோனா தொற்று அறிகுறியுடன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்த 60 வயது நபா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com