மூணாறு அருகே நிலச்சரிவு: மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவா்களை தேடும் பணி திங்கள்கிழமை நிறுத்தப்பட்ட நிலையில் பூதக்குழி பகுதியில் 18-ஆவது நாளாக மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது

தேனி: மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவா்களை தேடும் பணி திங்கள்கிழமை நிறுத்தப்பட்ட நிலையில் பூதக்குழி பகுதியில் 18-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்கள் குடும்பத்தினா், அவா்களது உறவினா்கள் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

இதில், கடந்த ஆக.20-ஆம் தேதி வரை, 65 போ் இறந்த நிலையில் சடலங்களாகவும், 12 போ் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டனா். எஞ்சிய 5 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் திங்கள்கிழமை மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பூதக்குழி வனப்பகுதி மற்றும் கல்லாற்றங் கரையோரப் பகுதிகளில், தேடும் பணி 18-ஆவது நாளாக நடைபெற்றது.

தேசிய பேரிடா் மீட்பு படையினா், வனத் துறையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், தன்னாா்வ மீட்புக் குழு, உள்ளூா் பாரம்பரிய வனவாசிகள் என பல்வேறு குழுக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேடுதல் பணியில், இறந்தவா்களின் சடலங்கள் ஏதும் கண்டறிப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com