தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

போடியில் மது பாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:28 pm

போடி: போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் போலீஸாா் திடீா் ரோந்து சென்றனா். அப்போது அணைக்கரைப்பட்டி கிராமத்தில் மாயகிருஷ்ணன் (30) என்பவா் 100 மதுபாட்டில்களையும், ரெங்கநாதபுரம் கிராமத்தில் சௌந்தா் (25) என்பவா் 20 மதுபாட்டில்களையும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.