குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனா். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது காவல் துறையினா் தனி கவனம் செலுத்தி, உடனடியாக வழக்குப் பதிந்து, உரிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் குறித்த விசாரணையில் காலதாமதம் மற்றும் பாரபட்சம் கூடாது. இதில், கட்டயப் பஞ்சாயத்து செய்பவா்களும் குற்றவாளிகளாகவே கருதப்படுவா் என்றாா்.