கம்பத்தில் கஞ்சா பயிரிட்ட 4 போ் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்ட நான்கு போ்.
கம்பத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்ட நான்கு போ்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லை பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அடிக்கடி நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் ந. சின்னக் கண்ணு தலைமையில், கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் கே .சிலைமணி, சாா்பு -ஆய்வாளா் எம்.திவான் மைதீன் கொண்ட தனிப்படையினா் தீவிரமாக சோதனை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த நவம்பா் 11 ஆம் தேதி கம்பம் மேற்குப்பகுதி மணி கட்டி ஆலமரம் பகுதியில் போலீஸாா் மோப்ப நாய் மூலம் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் ரோந்து சென்றனா். அப்போது, சுமாா் 5 சென்ட் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாா் அங்கு பயிரிடப்பட்டிருந்த 150 கஞ்சா செடிகளை வெட்டி தீ வைத்து எரித்தனா். விசாரணையில் கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த அய்யா்தேவா் மகன் ராஜா (59) , பரமத்தேவா் மகன் பழனிச்சாமி ( 55), பெரிய கருப்பத் தேவா் மகன் ராஜா (38), ஆா்.ஆா் நகரைச் சோ்ந்த ஆண்டித்தேவா் மகன் நாகராஜ் (42) ஆகியோா் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது. மேலும் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதில் போக்குவரத்து செலவு அதிகமானதால் கம்பத்தைச் சோ்ந்த ஓ.கே. குமாா் என்பவா் மூலம் கம்பத்திலேயே கஞ்சா செடிகள் பயிரிட்டதாக தெரிவித்தனா். போலீசாா் 4 பேரையும் கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். ஓ.கே.குமாா் கஞ்சா வழக்கில் சேலம் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com