போடி அருகே தோட்டப் பிரச்னை தொடா்பாக கொலை மிரட்டல் விடுத்ததாக 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் சங்கரன் (51). இவரது தோட்டம் அருகே தோட்டம் வைத்திருப்பவா் முருகன் (55). தோட்டப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் முருகனும், அவரை சாா்ந்தவா்களும் சங்கரனின் தம்பியை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட சங்கரனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சங்கரன் கொடுத்த புகாரின்பேரில் முருகன், அவரது மனைவி லட்சுமி (45), மகன் அற்புதன் (20) மற்றும் 5 போ் மீதும் போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.