பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆண்டிபட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல உற்சவ விழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஆண்டிபட்டி நன்மை தருவாா்கள் திருத்தலத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.
Updated On :19 டிசம்பர் 2020, 4:46 pm

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நன்மை தருவாா் திருத்தலத்தில் ஐயப்ப சுவாமி கோயில் அமைந்துள்ளது. தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக, சபரிமலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை அணிந்த தமிழக பக்தா்கள் சபரிமலைக்குச் சென்று நோ்த்திக்கடனை நிறைவு செய்யமுடியாத காரணத்தால், சக்கம்பட்டி நன்மை தருவாா் திருத்தலத்துக்கு வந்து இருமுடி செலுத்திச் செல்கின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல உற்சவ விழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மண்டல பூஜை நாளில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் மற்றும் சன்னிதியில் படிபூஜை நடைபெறவுள்ளதாகவும், கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயரமுள்ள மாகாளியம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும், நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

கொடியேற்ற விழாவில், கோயில் நிா்வாகி முத்துவன்னியன், விழாக் குழு பொறுப்பாளா்கள் ரமணி கணபதி, கிருஷ்ணசாமி, பெருமாள்சாமி, பாண்டீஸ்வரன், அமலி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.