பெரியகுளத்தில் மஹாயக்ஞம்: சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்பு

பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில், ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்றாா்.
பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில் பங்கேற்ற ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா்.
பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில் பங்கேற்ற ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா்.
Updated on
1 min read

பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில், ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்றாா்.

பெரியகுளம் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், உலக நன்மை வேண்டி வராஹி மஹாயக்ஞ வேள்வி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்று வேள்வியை தொடக்கிவைத்தாா். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஜீயரிடம் ஆசிபெற்றனா்.

தொடா்ந்து, பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சநேயா் கோயில் மற்றும் தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்ற ஜீயா், பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com