அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வைகை அணையில் மீன்பிடிப்பு நிறுத்தம்: மீன்வளத்துறை உத்தரவு

தேனி மாவட்டம் வைகை அணையில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் புதன்கிழமை முதல் மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:30 am

DIN

தேனி மாவட்டம் வைகை அணையில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் புதன்கிழமை முதல் மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள 100- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் நாள்தோறும் சுமாா் 200 முதல் 300 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களாக தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தற்போது 60 அடியை தொட்டது. நீா்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மீனவா்கள் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்குவதில்லை. கடந்த சில நாள்களாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் மீன்கள் கிடைக்காமல் திரும்பினா்.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் 45 அடிக்கும் கீழே சரிந்தால் மட்டுமே மீன்கள் பிடிபடும் என்பதால், நீா்மட்டம் சரியும் வரை மீன்பிடி தொழில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.