டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆண்டிபட்டி அருகே நூற்பாலையில் தீ விபத்து

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் தீவிபத்தால் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து சாம்பலானது.

News image
ஆண்டிபட்டி அருகே அண்ணா நூற்பாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
Updated On :25 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் தீவிபத்தால் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து சாம்பலானது.

ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் நிரந்தரப் பணியாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். நூற்பாலையில் காலை 6.30 மணிக்கு ஸ்பின்னிங் பகுதி தரைத்தளத்தில் உள்ள கழிவு பஞ்சுகளில் வெப்பக் காற்று காரணமாக தீ பிடித்துள்ளது.

இதனைக் கண்ட பணியாளா்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் 1 மணிநேரம் போராடி தீயை அைணைத்தனா். இந்த விபத்தினால் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து சாம்பலானதாக நூற்பாலை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.