தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த, 25 வயதுடைய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த தவலறிந்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அறையை விட்டு வெளியேறினர்.