இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்கு உலகிற்கு நலன்: சீன அரசு விருப்பம்
இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்கு உலகிற்கு நலன்: சீன அரசு


இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்கு உலகிற்கு நலன் என்று சீன அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போர் பதற்றமான சூழலில் இந்தியாவுடன் கைகோக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து, தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களுடன் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் இ, “இந்தியாவும் சீனாவும் ஒருபடி மேலே போய் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்பட வேண்டும். அதன்மூலம், பிரிக்ஸ் தலைமைப் பதவியிலும் இரு நாடுகளும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஒருவரையொருவர் ஆதரவளிக்க வேண்டும். ஒருங்கிணைந்தால், நாம் தெற்குலகுக்கு புது நம்பிக்கையை கொண்டு வரலாம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...