விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது: விவசாயிகள் கவலை

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர்வரத்து வழங்கும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News image
முல்லைப்பெரியாறு அணை.
Updated On :1 நவம்பர் 2020, 5:38 am

DIN

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர்வரத்து வழங்கும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு, முல்லையாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் அக்.30 முதல் மழை பெய்யவில்லை, இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

அக்.31 இல் அணைக்கு விநாடிக்கு 526 கன அடி தண்ணீர் வந்தது. ஞாயிற்றுக்கிழமை (நவ.1 ல் ) அணைக்கு விநாடிக்கு, 385 கனஅடியாக குறைத்து  வந்தது. அதே நேரத்தில் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,389 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து குறைவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்படும் என்று தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 125.45 அடியாக இருந்தது.

அணையில் 3,715 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்குள் விநாடிக்கு 385 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,389 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேசமயம் பெரியாறு, தேக்கடி ஏரிப் பகுதியில் மழை பெய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.