போடி அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
போடி அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி இறந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


போடி அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி இறந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சுருளீஸ்வரன் மகன் ராஜபாண்டி (23). இவா் போடி அருகே நாகலாபுரத்தில் உள்ள தனியாா் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை பணிக்கு வந்த ராஜபாண்டி அங்குள்ள காவலா் அறையில் ஓய்வு எடுத்துள்ளாா். அப்போது அங்கு அவரை விஷப் பூச்சி கடித்ததில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...